வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கண்காணிப்பு பயணமொன்றில் இணைந்தார்.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கண்காணிப்பு பயணமொன்றில் இணைந்தார்.
கொக்கிளாய் முகத்துவாரத்தைச் சூழ்ந்துள்ள வீட்டு வசதி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளையும் அடிப்படை வசதிகளையும் வழங்குவதில் பிரதி அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் வாழும் மக்களின் வீடுகளும் தற்காலிக குடியிருப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளம் மற்றும் புயல்களால் பாதிக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு ஏற்பட்ட 'திட்வா' சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கினாலும் பல வீடுகள் சேதமடைந்து மீண்டும் குடியேற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதனால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை கொக்கிளாய் பகுதியில் உள்ள வேறொரு பாதுகாப்பான இடத்தில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பிரதி அமைச்சரின் தலைமையில் ஒரு குழு, இந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ள நிலப்பரப்பை ஆய்வு செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.இந்தக் களப் பயணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க அவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். திலகநாதன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தலைவர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. உமாமகேஸ்வரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆர். விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூக சக்தி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No Comments